/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.2.21 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
/
ரூ.2.21 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
ADDED : செப் 22, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர்:சிவகங்கை மாவட்டம் சோலுடையான்பட்டி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2.21 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
திருக்கோஷ்டியூர் அருகே சோலுடையான்பட்டியில் உள்ள இக்கடை (எண்:7747) மேற்பார்வையாளராக பாண்டித்துரை 51 உள்ளார். செப்., 20 காலை 6:00 மணிக்கு அப்பகுதி மக்கள் இக்கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அவருக்கு தெரிவித்தனர். அவர் வந்து கடையை திறந்து பார்த்தபோது 31 பெட்டிகளில் இருந்த ரூ.2.21 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மர்மநபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது. திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.