sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் பள்ளிவாசல்களில் ரூ.4.25 லட்சம் திருட்டு

/

காரைக்குடியில் பள்ளிவாசல்களில் ரூ.4.25 லட்சம் திருட்டு

காரைக்குடியில் பள்ளிவாசல்களில் ரூ.4.25 லட்சம் திருட்டு

காரைக்குடியில் பள்ளிவாசல்களில் ரூ.4.25 லட்சம் திருட்டு


ADDED : பிப் 14, 2025 01:58 AM

Google News

ADDED : பிப் 14, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:காரைக்குடியில் உள்ள இரு பள்ளிவாசல்களில் அடுத்தடுத்து திருட்டு நடந்துள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டுதலைவாசலில் உள்ள பள்ளிவாசலில் பிப்.23ம் தேதி மதரசா பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. இதற்காக ரூ. 4.20 லட்சம் தயார் செய்யப்பட்டு பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை பள்ளிவாசலை திறந்தபோது பணம் வைத்திருந்த அறை மற்றும் பீரோ உடைக்கப்பட்டு ரூ. 4.20 லட்சம் மற்றும் ஒரு பவுன் தங்க நாணயம் திருடு போயிருந்தது.

போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த நபர், முன்னதாக ஆறுமுக நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலிலும் பீரோவை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடியது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us