/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைதீர் கூட்டத்தில் ரூ.4.81 லட்சம் உதவி
/
குறைதீர் கூட்டத்தில் ரூ.4.81 லட்சம் உதவி
ADDED : ஏப் 23, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
குறைதீர் முகாமில் இலவச வீட்டு மனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி உபகரணம் உட்பட பல்வேறு கோரிக்கைகளாக 514 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.4.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.