sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கூட்டுறவு வங்கியில் ரூ.78.44 கோடி நிலுவை; 12,254 விவசாயிகள் இழுத்தடிப்பு  

/

கூட்டுறவு வங்கியில் ரூ.78.44 கோடி நிலுவை; 12,254 விவசாயிகள் இழுத்தடிப்பு  

கூட்டுறவு வங்கியில் ரூ.78.44 கோடி நிலுவை; 12,254 விவசாயிகள் இழுத்தடிப்பு  

கூட்டுறவு வங்கியில் ரூ.78.44 கோடி நிலுவை; 12,254 விவசாயிகள் இழுத்தடிப்பு  


ADDED : நவ 30, 2024 06:35 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற ரூ.78.44 கோடி கடன் திரும்ப செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாக சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல் வெளியானது.

சிவகங்கை மாவட்ட அளவில் கூட்டுறவு துறையின் கீழ் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகிறது.

இந்த சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை அடமான கடன், கால்நடைகள் வளர்க்க கடன் வழங்கப்படுகிறது. பயிர், நகை, கால்நடை கடன் பெற்ற விவசாயிகள் பெரும்பாலும் வாங்கிய கடனை கூட்டுறவு வங்கிகளில் செலுத்துவதில்லை என புகார் எழுந்தது.

நேற்று சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், பயிர் கடன் பெற்ற விவசாயிகளில் 10,104 பேர் ரூ.67.19 கோடி, கால்நடை வளர்ப்பு கடன் பெற்ற 2,150 விவசாயிகள் ரூ.11.25 கோடி என ஒட்டு மொத்தமாக தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 12,254 விவசாயிகள் ரூ.78.44 கோடி கடன் நிலுவை வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது; கடன் நிலுவை வைத்துள்ள விவசாயிகளிடம், பழைய கடனை பெற்றுக்கொண்டு, புதிதாக கடன் வழங்குமாறு கடன் சங்க செயலர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அதன்படி விவசாயிகளும் பழைய கடன்களை செலுத்திவிட்டு, புதிய கடன்களை பெற்று வருகின்றனர். அனைத்து விவசாயிகளும் இந்நடைமுறையை கடைபிடித்து, வங்கியின் வளர்ச்சிக்கு உதவவேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us