sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா துவக்கம்

/

எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா துவக்கம்

எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா துவக்கம்

எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா துவக்கம்


ADDED : மார் 31, 2025 06:11 AM

Google News

ADDED : மார் 31, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுடன் துவங்கியது.

இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு காப்பு கட்டுடன் பங்குனி திருவிழா துவங்கியது.

பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். விழா நாள்களின் போது தினம்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெறும். ஏப்., 6ம் தேதி இக்கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்தி செலுத்த உள்ளனர்.

அன்று மாலை6:00 மணிக்கு எஸ்.கரிசல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், பூக்கரகம், தீச்சட்டிகள், கரும்பாலை தொட்டில், ஆயிரங்கண் பானை மற்றும் அலகுகள் குத்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி செலுத்த உள்ளனர்.

டிரஸ்டிகள் ராக்கு லட்சுமணன், பாண்டி ஆகியோர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us