sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆடிவெள்ளிக்காக மடப்புரத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

/

ஆடிவெள்ளிக்காக மடப்புரத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

ஆடிவெள்ளிக்காக மடப்புரத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

ஆடிவெள்ளிக்காக மடப்புரத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்


ADDED : ஜூலை 12, 2025 05:26 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: ஆடி மாதம் பிறக்க உள்ள நிலையில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தடுப்பு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் ஆடி வெள்ளி கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் முன்புறம், கோயில் வாசல் உள்ளிட்ட இடங்களில் தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பக்தர்கள் தாகம் தீர்க்க பல இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வெயில் காலம் என்பதால் பக்தர்கள் நடக்க ரப்பர் விரிப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் கூறுகையில் :

ஆடி வெள்ளிக்கிழமை வர உள்ள நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்பு, தற்காலிக உண்டியல் உள்ளிட்டவை அமைத்து வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே இல்லை.

அம்மன் முன்புறம் உள்ள சிலைகள் சேதமடைந்த நிலையில் அவற்றை சரி செய்ய பாலாலயம் நடந்து ஆறு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை பணிகள் மேற்கொள்ளப்படாமல் சேதமடைந்த சிலைகளின் மீது வேட்டி, சேலையை அலங்காரமாக சுற்றி வைத்துள்ளனர் என்றனர்.






      Dinamalar
      Follow us