sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாழை காப்பீடு செய்ய செப்., 16 கடைசி

/

வாழை காப்பீடு செய்ய செப்., 16 கடைசி

வாழை காப்பீடு செய்ய செப்., 16 கடைசி

வாழை காப்பீடு செய்ய செப்., 16 கடைசி


ADDED : ஆக 09, 2025 03:25 AM

Google News

ADDED : ஆக 09, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் 1,200 எக்டேரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வறட்சி, வெள்ளம், நோய் தாக்குதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, பயிர் விளைச்சல் குறையும் போது ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யலாம். இந்த ஆண்டு குறுவை பருவத்தில் பயிரிட்டுள்ள வாழை பயிருக்கு சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி வட்டார விவசாயிகள் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

காப்பீட்டு தொகை எக்டேருக்கு ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 312, இதற்கான பிரீமிய தொகை ரூ.11 ஆயிரத்து 65 மற்றும் 60 பைசாவை அந்தந்த தேசிய வங்கி, தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் அல்லது இ- சேவை மையங்கள் மூலம், செப்., 16க்குள் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us