sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பாலியல் வழக்கு: தொழிலாளிக்கு சிறை

/

பாலியல் வழக்கு: தொழிலாளிக்கு சிறை

பாலியல் வழக்கு: தொழிலாளிக்கு சிறை

பாலியல் வழக்கு: தொழிலாளிக்கு சிறை


ADDED : ஏப் 08, 2025 07:02 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கையில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி உத்தரவிட்டார்.காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்துாரை சேர்ந்தவர் பழனிச்சாமி 56. கொட்டகை தொழிலாளி. இவர் 2022ல் குன்றக்குடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த உறவினர் வீட்டிற்கு கொட்டகை அமைக்க சென்றபோது 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதில் சிறுமி 3 மாதம் கர்ப்பம் அடைந்தார். சிறுமியை அழைத்துச் சென்று கர்ப்பத்தை கலைத்தார். சிறுமியின் பெற்றோர் 2023 ஜன.,23ல் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் பழனிச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார். பழனிச்சாமிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us