/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் சனி பிரதோஷ வழிபாடு
/
திருப்புத்துாரில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED : ஜன 12, 2025 06:23 AM

திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று மதியம் 3:30 மணிக்கு நந்திதேவருக்கு முன்பாக யாகசாலை பூஜைகளை ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தினர். பின்னர் புனித கலசநீர் மற்றும் திரவியங்களால் நந்திதேவருக்கும், உற்ஸவ சுவாமி, அம்பாள் ஆகியோருக்கும் அபிேஷக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின் கோயில் பிரகாரங்களில்சுவாமி புறப்பாடு நடந்தது.
* மானாமதுரை ஆனந்தவல்லி -சோமநாதர் கோயிலில் சனி மகா பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. உற்ஸவர் சோமநாதர் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தை வலம் வந்தனர். இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலிலும், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலும் விழா நடந்தது.