sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப கையெழுத்து இயக்கம்

/

ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப கையெழுத்து இயக்கம்

ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப கையெழுத்து இயக்கம்

ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப கையெழுத்து இயக்கம்


ADDED : ஜன 04, 2024 02:08 AM

Google News

ADDED : ஜன 04, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

காலியாக உள்ள பணியிடங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்து ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பணிநியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

2015ம் ஆண்டிற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளாக கல்லுாரி ஆசிரியர் பணி நியமனம் நடைபெறாததால் உயர்கல்வி தரம் பெரிதும் பாதிப்பதாக உள்ளது. கல்லுாரி ஆசிரியர் பணிக்கான உரிய கல்வித் தகுதிகளைப் பெற்றிருந்தும் நிரந்தரப் பணிக்கான வாய்ப்பு கிடைக்காமல் பலர் கவுரவ விரிவுரையாளர்களாகவே பணியாற்றி ஓய்வு பெறும் நிலைக்கு வந்து விட்டனர்.

ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் கையெழுத்து இயக்கம் நடந்தது. கிளை தலைவர் பாண்டியராமன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் லாரன்ஸ் சேவியர், துணைத்தலைவர் மைக்கேல், இணைச்செயலர் சதிஷ்கண்ணன், சிவகங்கை, ராமநாதபுரம் மண்டலத்தின் துணைத்தலைவர் சிவா, இணைச்செயலர் சோமசுந்தர மணிகண்டன் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us