sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை: 1.33 லட்சம் ஏக்கருக்கு 55,000 விவசாயிகள் பிரீமியம்  இன்னும் 6 நாட்களே அவகாசம்  

/

சிவகங்கை: 1.33 லட்சம் ஏக்கருக்கு 55,000 விவசாயிகள் பிரீமியம்  இன்னும் 6 நாட்களே அவகாசம்  

சிவகங்கை: 1.33 லட்சம் ஏக்கருக்கு 55,000 விவசாயிகள் பிரீமியம்  இன்னும் 6 நாட்களே அவகாசம்  

சிவகங்கை: 1.33 லட்சம் ஏக்கருக்கு 55,000 விவசாயிகள் பிரீமியம்  இன்னும் 6 நாட்களே அவகாசம்  


ADDED : நவ 25, 2024 06:14 AM

Google News

ADDED : நவ 25, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கையில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர 1.33 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்த 55 ஆயிரம் விவசாயிகள் மட்டுமே பிரீமிய தொகை கட்டியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சி அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாக பரவலாக அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து பொதுப்பணி, ஊராட்சி ஒன்றிய கண்மாய், ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன.

அதே போன்று வைகை ஆறு மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகளுக்காக, ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் மூலம் கண்மாய் பாசன விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அவ்வகையில் மாவட்ட அளவில் இது வரை 1 லட்சத்து 67 ஆயிரத்து 960 ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பிரீமிய தொகையாக ஏக்கருக்கு ரூ.451.80 வரை பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் பெற்று வருகிறது.

இதற்கு பயிர் காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.30,120 வரை வழங்கப்படும். ஏற்கனவே பயிர் காப்பீட்டிற்கான பிரீமிய தொகை செலுத்த நவ.,15 கடைசி நாளாக இருந்தது.

இந்நிலையில் தீபாவளி, ஆயுதபூஜைக்கு தொடர் விடுமுறையாக இருந்ததால், பிரீமிய தொகை செலுத்த முடியவில்லை என அரசுக்கு விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து பயிர் காப்பீட்டிற்கு பிரீமிய தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் நவ.,30 வரை வழங்கியுள்ளனர். இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், அனைத்து இ-சேவை மையங்களில் விவசாயிகள் பிரீமிய தொகை செலுத்தி, காப்பீடு செய்து கொள்ளலாம்.

மாவட்ட அளவில் கிணறு, கண்மாய் பாசனம் மூலம் 1.67 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். அதில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 380 ஏக்கர் நிலங்களுக்கு மட்டும் 55 ஆயிரம் விவசாயிகள் பிரீமிய தொகை கட்டியுள்ளனர். இன்னும் மாவட்ட அளவில் 34 ஆயிரத்து 580 ஏக்கரில் நெல் நடவு செய்த விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும்.

பயிர் காப்பீட்டிற்கு பிரீமிய தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் நவ.,30 வரை வழங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us