sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை நகராட்சி தினசரி சந்தை; பஸ் ஸ்டாண்ட் கடை ஏலம் எப்போது 

/

சிவகங்கை நகராட்சி தினசரி சந்தை; பஸ் ஸ்டாண்ட் கடை ஏலம் எப்போது 

சிவகங்கை நகராட்சி தினசரி சந்தை; பஸ் ஸ்டாண்ட் கடை ஏலம் எப்போது 

சிவகங்கை நகராட்சி தினசரி சந்தை; பஸ் ஸ்டாண்ட் கடை ஏலம் எப்போது 


ADDED : ஜூன் 12, 2025 10:57 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட தினசரி சந்தை, பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் விடப்பட்டு பயன்பாட்டிற்கு வராததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

சிவகங்கை நகராட்சி சார்பில் தினசரி சந்தை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.49 கோடியில் 100 கடைகள் கட்டுவதற்காக கட்டுமான பணி நடந்தது. வாகனம் நிறுத்த இடப்பற்றாக்குறை காரணமாக தற்போது 90 கடைகள் கட்டப்பட்டுள்ளது.

கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைகளை பிப்.6, 18, மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது ஒரு கடைக்கு வைப்புத்தொகையாக ரூ. ஒரு லட்சம் செலுத்த வேண்டுமென முதல் 2 ஏலத்திலும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முதல் 2 ஏலத்திலும் வியாபாரிகள் பங்கேற்வில்லை.

இதனால் வைப்புத் தொகையை ரூ.50 ஆயிரமாக குறைத்து ஏலம் அறிவிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 5ல் நடந்த ஏலத்திலும் வியாபாரிகள் பங்கேற்கவில்லை. இதனால் மூன்று முறை ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் 3.49 கோடியில் கடைகள் கட்டியும் வியாபாரிகள் ஏலம் எடுக்க வராததால் நகராட்சிக்கு தற்போது இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் பஸ் ஸ்டாண்டில் ஒரு பகுதியில் மட்டும் விரிவாக்கப்பணி ரூ.1.95 கோடியில் 2023 மார்ச்சில் தொடங்கியது. நீண்ட இழுபறிக்கு பின்னர் 18 கடைகள், தரைதளம், கழிப்பிடம் கட்டப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.பி., நிதியில் ரூ.2 கோடிக்கு திருப்புத்துார் - மதுரை பஸ் நிற்கும் பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு பகுதி பணியை சிவகங்கை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் திறந்து வைத்தும் 18 கடைகள் ஏலம் விட்டு பயன்பாட்டிற்கு வரவில்லை.

ஏற்கனவே பஸ் ஸ்டாண்டில் கடை வைத்து நடத்தி வந்தவர்கள் தங்களுக்கு ஏலத்தில் விரும்பிய கடைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும், மற்றொரு தரப்பினர் ஏலத்தை முறைப்படி நடத்த வேண்டும் எனவும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் ஏலம் விடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.






      Dinamalar
      Follow us