sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளையான்குடி சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

/

இளையான்குடி சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

இளையான்குடி சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

இளையான்குடி சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : மே 30, 2025 01:45 AM

Google News

ADDED : மே 30, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 13வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள்சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புஅளித்தது.

இளையான்குடி அருகே பெத்தானேந்தல் கோட்டைச்சாமி மகன் கார்த்திக் 25. இவர் கூலி வேலை செய்து வந்தார். பாட்டி வீட்டிற்கு வந்த ஒன்பதாம் வகுப்பு படித்த 13 வயது சிறுமி ஒருவரிடம் அவர் பழகினார்.

அச்சிறுமியிடம் திருமணம் செய்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

இந்த பழக்கத்தில் 2021 ஜூலை 21ல் சிறுமியை அவர் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி 9 மாத கர்ப்பிணியானார்.

சிவகங்கை மகளிர் போலீசார் விசாரித்து கார்த்திக்கை கைது செய்தனர். இவ்வழக்கு சிவகங்கை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.கோகுல்முருகன் முன்னிலையில் நடந்தது.

கார்த்திக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும்விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

சிறுமிக்கு ரூ.5 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us