sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை பாலியல் வழக்கு  தொழிலாளிக்கு ஆயுள்  போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

/

சிவகங்கை பாலியல் வழக்கு  தொழிலாளிக்கு ஆயுள்  போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சிவகங்கை பாலியல் வழக்கு  தொழிலாளிக்கு ஆயுள்  போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சிவகங்கை பாலியல் வழக்கு  தொழிலாளிக்கு ஆயுள்  போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : அக் 26, 2024 05:07 AM

Google News

ADDED : அக் 26, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாண்டியராஜனுக்கு 55, ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேவகோட்டை அருகே கள்ளங்குடி புதுார்கூலி தொழிலாளர் பாண்டியராஜன் 55. இவர் கடந்த 2020 நவ.,10ல் அப்பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

தேவகோட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

பாலியல் வழக்கில் தொடர்புடைய கூலி தொழிலாளிக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்குஅரசு, ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us