/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
10ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை முதலிடம் * அரசு பள்ளிகள் அளவிலும் முதலிடம்
/
10ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை முதலிடம் * அரசு பள்ளிகள் அளவிலும் முதலிடம்
10ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை முதலிடம் * அரசு பள்ளிகள் அளவிலும் முதலிடம்
10ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை முதலிடம் * அரசு பள்ளிகள் அளவிலும் முதலிடம்
ADDED : மே 16, 2025 11:44 PM
சிவகங்கை:தமிழகத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் 98.31 சதவீத தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது.
சிவகங்கை மாவட்டத்தில் 278 பள்ளிகளை சேர்ந்த 8,870 மாணவர், 8,809 மாணவிகள் என 17,679 பேர் தேர்வு எழுதினர். இதில், 8,662 மாணவர், 8,718 மாணவிகள் என 17,380 பேர் தேர்ச்சி பெற்று, 98.31 சதவீதம் எடுத்து மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்தது.
இம்மாவட்டத்தில் உள்ள 137 அரசு பள்ளிகளில் 7,571 மாணவர் தேர்வு எழுதியதில், 7,381 பேர் தேர்ச்சி பெற்று 97.49 சதவீதம் எடுத்து, அரசு பள்ளிகளிலும் மாநில அளவில் முதலிடத்தை சிவகங்கை மாவட்டம் பிடித்தது. கணிதத்தில் 49, அறிவியல் -211, சமூக அறிவியலில் 511 பேர் 100 (சென்டம்) மதிப்பெண் எடுத்துள்ளனர். மாவட்ட அளவில் 278 பள்ளிகளில் 175 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன.
இம்மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் 2016-17ல் மாநில அளவில் 8 ம் இடம் பிடித்திருந்தது. 2017-- 2018ல் 98.5 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். அதற்கு பின்னர் இம்மாவட்டம் பத்தாம் 8, 6 இடங்களை பெற்றது. 2023--2024ல் 2 ம் இடம் பிடித்தது. தற்போது முதலிடம் பெற்றுள்ளது.
* அமைச்சர் பாராட்டு
கடந்த ஆண்டு தேர்வில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சிவகங்கை 2 ம் இடம் பிடித்தது. இந்த ஆண்டு 6 ம் இடத்திற்கு சென்றது. ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது.