sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்தூரில் 2.32 ஏக்கர் நிலம்மோசடி : 4 பேர் மீது வழக்கு

/

திருப்புத்தூரில் 2.32 ஏக்கர் நிலம்மோசடி : 4 பேர் மீது வழக்கு

திருப்புத்தூரில் 2.32 ஏக்கர் நிலம்மோசடி : 4 பேர் மீது வழக்கு

திருப்புத்தூரில் 2.32 ஏக்கர் நிலம்மோசடி : 4 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 04, 2011 11:49 PM

Google News

ADDED : ஆக 04, 2011 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:திருப்புத்தூரில் 2.32 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக சகோதரி உட்பட 4 பேர் மீது சிவகங்கை நில அபகரிப்பு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.திருப்புத்தூரை சேர்ந்தவர் நாகரத்தினம்.

இவரது மகன்கள் பொன்னழகு, அம்மையப்பன், மகள்கள் மீனாம்பாள், அமுதா, சித்ரா. மஞ்சுளா தியேட்டர் ரோட்டில் நாகரத்தினத்திற்கு சொந்தமான 2.32 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை 87ம் ஆண்டு டிச.,14ம் தேதி மகள்களுக்கு உயில் எழுதி கொடுத்தார். இதற்கிடையில், அதே இடத்தை நாகரத்தினம், 2009ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, தனது இரு மகன்களுக்கும் திருப்புத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இனாம் செட்டில்மென்ட் அடிப்படையில் பதிவு செய்து கொடுத்தார்.நிலத்தை இனாம் சென்டில்மெண்ட் செய்த பிறகு, மீனாம்பாள், தனது தந்தை எழுதி கொடுத்த உயிலை பயன்படுத்தி, சொத்துக்களை தனது கணவர் திருஞானசம்பந்தம் பெயருக்கு, கடந்த மாதம் 4ம் தேதி பவர் எழுதி கொடுத்தார். இந்த பவரின் மூலம் திருப்புத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் உதவியுடன், மேலூரை சேர்ந்த மதிசேகருக்கு விற்றுள்ளனர்.புகார்: இது குறித்து அறிந்த பொன்னழகு, எஸ்.பி., பன்னீர்செல்வத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவுபடி, பால்ராஜ் டி.எஸ்.பி., சிறப்பு எஸ்.ஐ., கனகராஜ் ஆகியோர் மீனாம்பாள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us