ADDED : மார் 28, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை (மார்ச் 29) அன்று நடத்த வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மாவட்ட அளவில் உள்ள 445 கிராம ஊராட்சிகளில் இச்சிறப்பு கிராம சபை கூட்டம், அன்றைய தினம் காலை 11:00 மணிக்கு நடத்த வேண்டும்.
இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தின கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட வேண்டும், என்றார்.