sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வசந்தப் பெருவிழா பொங்கல் வழிபாடு

/

வசந்தப் பெருவிழா பொங்கல் வழிபாடு

வசந்தப் பெருவிழா பொங்கல் வழிபாடு

வசந்தப் பெருவிழா பொங்கல் வழிபாடு


ADDED : ஏப் 21, 2025 05:49 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப்பெருவிழா மூன்றாம் திருநாளை முன்னிட்டு நேற்று பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

இக்கோயிலில் ஏப்.17ல் பூச்சொரிதல் விழா நடந்தது. மறுநாள் மாலை கொடியேற்றி காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது.

தொடர்ந்து தினசரி இரவில் சர்வ அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி திருக்குளம் வலம் வருகிறார். இரண்டாம் திருநாளில் அம்மனுக்கு ஊஞ்சல் வைபவம் நடந்தது. மூன்றாம் திருநாளை முன்னிட்டு நேற்று காலை கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

தொடர்ந்து மூலவர் சப்தமாதர் அம்மனுக்கு அலங்காரத் தீபாராதனை நடந்தது. ஏப்.22ல் பால்குடம் எடுத்தலும்,ஏப்.26 இரவில் அம்மன் ரத ஊர்வலமும், ஏப்.27 காலையில் தீர்த்தவாரி மஞ்சள்நீராட்டும், இரவில் தெப்பத்திருவிழா, திருக்குள தீபவழிபாடும் நடைபெறும்.

தொடர்ந்து காப்புக்களைந்து விழா நிறைவடையும். ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழா குழுவினர் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us