ADDED : பிப் 04, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் நேற்று மாநில அளவிலான கராத்தே போட்டி சிவம் மார்சியல் ஆர்ட்ஸ் கராத்தே பள்ளி சார்பாக நடந்தது.
மாஸ்டர் பரமசிவம் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் போட்டியை துவக்கி வைத்தார்.
நடுவராக மதுரை ராஜசேரன் பங்கேற்று போட்டியை நடத்தினார். போட்டியில் சிவகங்கை, மதுரை, துாத்துக்குடி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கோயம்புத்துார், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.