UPDATED : ஆக 17, 2026 07:16 PM
ADDED : ஆக 17, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி:காரைக்குடியில் துாய்மை பணியாளர்கள் முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., துாய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாநகர செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் கண்ணன், ஆதி மாரிமுத்து வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, இ.கம்யூ., மாநகரச் செயலாளர் ராஜீவ் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
