/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
/
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
ADDED : மே 28, 2025 11:37 PM
சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் இசை வகுப்புகளில் சேர விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் சிவகங்கையில் இயங்கும் அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதம், தவில், நாதசுரம், தேவாரம், மிருதங்கம், வயலின் பயிற்சி வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வயது 12 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
குரலிசை, பரதம், தேவாரம், வயலின் பயிற்சிக்கு 7ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். தவில், நாதசுரம்வகுப்பிற்கு கல்வி தகுதிதேவையில்லை. சேரும் மாணவர்களுக்கு 3 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மட்டுமே. இலவச பஸ் பாஸ் உண்டு.
மாணவர்களுக்கு விடுதிவசதி, கல்வி உதவி தொகையாக மாதம் ரூ.400 வீதம் வழங்கப்படும். இசைப்பள்ளியில் சேர விரும்பும்மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் சிவனை, சிவகங்கை பனங்காடி ரோட்டில் உள்ள அரசு இசைப்பள்ளியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.