sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பழுதாகி பாதியில் நின்ற டவுன் பஸ் மாணவர்கள், பொதுமக்கள் அவதி

/

பழுதாகி பாதியில் நின்ற டவுன் பஸ் மாணவர்கள், பொதுமக்கள் அவதி

பழுதாகி பாதியில் நின்ற டவுன் பஸ் மாணவர்கள், பொதுமக்கள் அவதி

பழுதாகி பாதியில் நின்ற டவுன் பஸ் மாணவர்கள், பொதுமக்கள் அவதி


ADDED : டிச 08, 2024 06:16 AM

Google News

ADDED : டிச 08, 2024 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி அருகே பலவான்குடியில், டவுன் பஸ் பழுதாகி பாதியில் நின்றதால் மாணவர்கள் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

காரைக்குடியில் இருந்து தினமும் காலை 6:00 மணிக்கு பள்ளத்தூருக்கு 6 ஏ டவுன்பஸ் செல்கிறது. காரைக்குடி பாண்டியன் நகர்,பேயன்பட்டி, சிறுவயல், பலவான்குடி, ஆத்தங்குடி சொக்கலிங்கம்புதூர் வழியாக பள்ளத்துார் வரை செல்லும்.

மீண்டும் பள்ளத்துாரில் இருந்து புறப்பட்டு சொக்கலிங்கம்புதூர் ஆத்தங்குடி பலவான்குடி வழியாக காரைக்குடி வந்தடையும்.

தினமும் 3 முறை பலவான்குடி வழியாக இந்த டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த டவுன் பஸ்சில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 8:30 மணிக்கு பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் பஸ்சில் சென்ற நிலையில் பஸ் பழுதாகி நின்றது. இதனால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மாணவர்களும், பயணிகளும் சிரமம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us