sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை கல்லுாரி ரோட்டில் டூவீலரில் சாகசம் செய்யும் மாணவர்கள்; வாகன ஓட்டிகள் அச்சம்

/

சிவகங்கை கல்லுாரி ரோட்டில் டூவீலரில் சாகசம் செய்யும் மாணவர்கள்; வாகன ஓட்டிகள் அச்சம்

சிவகங்கை கல்லுாரி ரோட்டில் டூவீலரில் சாகசம் செய்யும் மாணவர்கள்; வாகன ஓட்டிகள் அச்சம்

சிவகங்கை கல்லுாரி ரோட்டில் டூவீலரில் சாகசம் செய்யும் மாணவர்கள்; வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : ஜூன் 30, 2025 06:00 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை நகரில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இவர்களின் அதிவேகத்தால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் செல்வதாகவும் இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும்.

சிவகங்கை நகரில் பள்ளி மாணவர்கள் டூவீலர்கள் ஓட்டுவது அதிகரித்துள்ளது. சில அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதைக் கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இது மாணவர்கள் பள்ளிக்கு டூவீலரில் வருவதை ஊக்குவித்தது போன்று உள்ளது. ஆண்டுத்தோறும் பள்ளி அளவில் வட்டார போக்குவரத்து துறை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இருந்த போதும் பெற்றோர் மனது வைத்தால் மட்டுமே சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க முடியும். சிவகங்கையில் கல்லுாரி சாலை, மஜித்ரோடு, கலெக்டர் அலுவலக வளாகம், மகளிர் கல்லுாரி ரோடு உள்ளிட்ட பகுதியில் மாணவர்கள் ஒருவர் இரண்டு பேர் மட்டுமின்றி மூன்று முதல் நான்கு பேர் வரை ஒரே வாகனத்தில் அசுர வேகத்தில் செல்கின்றனர். இதனால் சிலர் விபத்தில் சிக்குகின்றனர். சில வாகனங்களில் வித்தியாசமான ஒளி எழுப்புவதால் சக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். 18 வயதை கடக்கும் முன் வாகனத்தை சரிவர இயக்கி பழகுவதற்குள் லைசன்ஸ் பெறுவதற்கு முன் வாகனம் வாங்கித்தருவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். போலீசார் காலை மாலையில் கல்லுாரி ரோடு, மகளிர் கல்லுாரி ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கண்காணிகப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

///






      Dinamalar
      Follow us