sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தொடர் மழைக்கு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

/

தொடர் மழைக்கு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தொடர் மழைக்கு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தொடர் மழைக்கு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்


ADDED : ஜூன் 24, 2024 01:40 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிரில் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

இப்பகுதியில் போர்வெல் மூலமே அதிக அளவில் விவசாயம் நடைபெறுகிறது. சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் போர்வெல் மூலம் நெல் சாகுபடி செய்தனர். விதைநெல், உரம், உழவு செலவு என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவழிக்கின்றனர்.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மாலை நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நெல் பயிர் பரிந்து வரும் நிலையில் மழைக்கு நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us