sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் பத்திரபதிவு அலுவலகம் திடீர் இடமாற்றம்

/

மானாமதுரையில் பத்திரபதிவு அலுவலகம் திடீர் இடமாற்றம்

மானாமதுரையில் பத்திரபதிவு அலுவலகம் திடீர் இடமாற்றம்

மானாமதுரையில் பத்திரபதிவு அலுவலகம் திடீர் இடமாற்றம்


ADDED : மார் 25, 2025 05:25 AM

Google News

ADDED : மார் 25, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையில் பத்திரப்பதிவு துறை சார்பதிவாளர் அலுவலகம் எவ்வித முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டதால், பத்திரம் பதிய வருவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மானாமதுரையில் அண்ணாதுரை சிலை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில்பத்திரபதிவு துறை சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டுவந்தது.

இங்கு மானாமதுரையை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்த்திபனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பத்திரம் பதிந்து வந்தனர். இக்கட்டடம் கட்டப்பட்டு நீண்ட காலமாகி விட்டதால் ஆங்காங்கே சேதமடைந்து மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து ஆவணங்கள் சேதமடைந்து வந்தன.

இதனைத் தொடர்ந்து புதிய கட்டடம் கட்ட வேண்டுமென்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டும் பணி துவக்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது செயல்பட்டு வந்த அலுவலகம் நேற்று முதல் மானாமதுரை இந்தியன் வங்கி அருகே உள்ள ஒரு கட்டடத்திற்கு எவ்வித முன்அறிவிப்பின்றி மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பத்திரம் பதிய வந்தவர்கள் அலுவலகம் மாறியது தெரியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us