sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாரந்தை ஊராட்சி மேட்டுக்குடியிருப்பில்  சேதமான சின்டெக்ஸ் தொட்டியால் அவதி 

/

மாரந்தை ஊராட்சி மேட்டுக்குடியிருப்பில்  சேதமான சின்டெக்ஸ் தொட்டியால் அவதி 

மாரந்தை ஊராட்சி மேட்டுக்குடியிருப்பில்  சேதமான சின்டெக்ஸ் தொட்டியால் அவதி 

மாரந்தை ஊராட்சி மேட்டுக்குடியிருப்பில்  சேதமான சின்டெக்ஸ் தொட்டியால் அவதி 


ADDED : ஆக 05, 2025 05:25 AM

Google News

ADDED : ஆக 05, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காளையார்கோவில் ஒன்றியம், மாரந்தை ஊராட்சி மேட்டுக்குடி யிருப்பு கிராமத்தில் குடிநீர் தொட்டி உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

காளையார்கோவில் ஒன்றியம், மாரந்தை ஊராட்சி மேட்டுக்குடி யிருப்பு கிராமத்தில் 25 குடும்பத்தினர் வசிக் கின்றனர். இங்கு 20 காவிரி கூட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன.

காவிரி குடிநீர் வராத காலங்களில் இக்குடி யிருப்பில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் இருந்து குடிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீரும் சரியாக வராத நிலையில், கிராமத்தில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியும் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதற்காக தண்ணீர் எடுக்க செல்பவர்கள் ஒவ்வொரு முறையும் மின் மோட்டாரை இயக்கி தான் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதனால் குடிநீர் விரயமாவதோடு, அடிக்கடி மின் மோட்டாரை இயக்கு வதால் பழுதாகி விடுகின்றன.

எனவே சேதமான சின்டெக்ஸ் தொட்டியை மாற்றித்தர வேண்டும் என மேட்டுக்குடியிருப்பு மக்கள் காளையார் கோவில் பி.டி.ஓ., கலெக்டரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us