நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள பதினெட்டான்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் அரியாச் செல்வம்21,இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த நிலையில் மணலுாரைச் சேர்ந்த இவரது காதலி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
இந்நிலையில் அவரது நினைவு நாளன்று காதலியின் நினைவாக மிகுந்த சோகத்தில் இருந்த அரியாச்செல்வம் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.