sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

'உங்களுடன் ஸ்டாலின்' ம னுக்களை ஆபீசில் புகுந்து திருடிட்டாங்களாம் போலீசில் புகாரளித்த தாசில்தார் இடமாற்றம்

/

'உங்களுடன் ஸ்டாலின்' ம னுக்களை ஆபீசில் புகுந்து திருடிட்டாங்களாம் போலீசில் புகாரளித்த தாசில்தார் இடமாற்றம்

'உங்களுடன் ஸ்டாலின்' ம னுக்களை ஆபீசில் புகுந்து திருடிட்டாங்களாம் போலீசில் புகாரளித்த தாசில்தார் இடமாற்றம்

'உங்களுடன் ஸ்டாலின்' ம னுக்களை ஆபீசில் புகுந்து திருடிட்டாங்களாம் போலீசில் புகாரளித்த தாசில்தார் இடமாற்றம்


ADDED : ஆக 31, 2025 06:56 AM

Google News

ADDED : ஆக 31, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் வீசப்பட்டிருந்த விவகாரத்தில், மர்ம நபர்கள் ஆபீசில் புகுந்து திருடிச் சென்று, வைகை ஆற்றில் வீசியுள்ளதாக தாசில்தார், போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், தாசில்தார் அலுவலகத்தின் பாதுகாப்பு அவ்வளவு மோசமா என்ற கேள்வி எழுகிறது.

தமிழகம் முழுதும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம் பொது மக்களிடம் மனுக்கள் பெற்று, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, அறிவிக்கப் பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில், 185 இடங்களில் முகாம் நடத்த, 40.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினர். ஒரு முகாமிற்கு எழுது பொருள், பேப்பர்கள் உள்ளிட்டவைகள் வாங்க, முகாமிற்கான செலவு தொகையாக, 30,000 ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

திருப்புவனம் வட்டாரத்தில் தி.புதுார், பூவந்தி, மடப்புரம், பொட்டப்பாளையம், பழையனுார் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வைகை ஆற்று நீரில், முகாமில் மக்கள் வழங்கிய மனுக்கள் மிதந்தன.

அவை ஜெராக்ஸ் பேப்பர்கள் என, கலெக்டர் பொற்கொடி பதிலளித் திருந்தார். ஆனால், ஆக., 22, 23 ஆகிய தேதிகளில் இப்பகுதியில் நடத்தப்பட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் என்பது உறுதியானது.

இதையடுத்து, திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார் போலீசில் அளித்த புகாரில், தாலுகா அலுவலகத்தில் இருந்த மனுக்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று வைகை ஆற்றில் வீசியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.

திருப்புவனம் தாசில்தார் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை. அதே சமயம், அலுவலகத்தில் புகுந்து கட்டுக்கட்டாக மனுக்களை திருடிச்செல்லும் அளவிற்கு அலுவலகம் பாதுகாப்பின்றி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேண்டுமென்றே சிலர் திருடிச்சென்று ஆற்றில் வீசியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். சில நாட்களில் தாசில்தாரால் தண்டிக்கப்பட்டவர்கள், அலுவலகத்தில் தகராறு செய்தவர்கள், அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் என, பல கோணங்களில் திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும், இதுபோன்று எத்தனை மனுக்கள் 'காணாமல்' போயுள்ளன என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தாசில்தார் விஜயகுமாரை பணியிட மாற்றம் செய்தும், ஏழு ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் நேற்று மாலை கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us