sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை

/

காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை

காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை

காரைக்குடியில் பட்டா வழங்க தாலுகா அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூலை 16, 2025 11:31 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:காரைக்குடியில் பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

காரைக்குடி பனந்தோப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு 1976 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாவை ஆன்லைனில் ஏற்றவில்லை. நிலத்திற்கு உரிய மதிப்பு கிடைக்காததால் இ - பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் இ பட்டா வழங்கவில்லை. இதனை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டது.

காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டமும் நடந்தது. அதில் பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும், இ பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால் நேற்று இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் காரைக்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தாசில்தார் ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் இ பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us