/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி
/
கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி
ADDED : நவ 07, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் புனித மைக்கேல் இன்ஜி., கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி வரவேற்றார். 'பொங்கு தமிழ்' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் நர்த்தகி நடராஜன் சிறப்புரை ஆற்றினார்.
புனித மைக்கேல் கல்வி குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி முதல்வர் அந்தோணி டேவிட்நாதன், புனித மைக்கேல் கல்லுாரி முதல்வர் கற்பகம், மாநில ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி பங்கேற்றனர்.

