sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட் கால்வாய் சிலாப் சேதம்  

/

மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட் கால்வாய் சிலாப் சேதம்  

மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட் கால்வாய் சிலாப் சேதம்  

மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட் கால்வாய் சிலாப் சேதம்  


ADDED : நவ 07, 2025 11:20 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மதகுபட்டி பஸ் ஸ்டாண்டில் கால்வாய் மூடி சேதமடைந்துள்ளதால் பயணிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை - திருப்புத்துார் ரோட்டில் மதகுபட்டி ஊராட்சி உள்ளது. இங்கு போதிய பஸ் வசதியின்றி, ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வந்தனர். பஸ் ஸ்டாண்ட் இன்றி சிரமம் அடைவதாக ஊராட்சிக்குட்பட்ட மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து மதகுபட்டியில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டினர்.

இந்த பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் மழைக்காலங்களில் மண்மலை காட்டில் உற்பத்தியாகும் மழை நீர் பஸ் ஸ்டாண்ட் கட்டியுள்ள இடத்தில் உள்ள கால்வாய் வழியாக பூங்குடி கண்மாய்க்கு செல்கிறது.

இக்கால்வாய்க்கு மேல் பஸ் ஸ்டாண்ட் கட்டும்போது, பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் தெற்கு பகுதியில் சிமென்ட் சிலாப் போடப்பட்டுள்ளது.

காலப்போக்கில் இந்த சிலாப் உடைந்து, பஸ் ஸ்டாண்டிற்குள் கால்வாய் பள்ளமாக காட்சி அளிக்கிறது. இரவில் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வோர் கால்வாய்க்குள் விழுந்து விபத்திற்குள்ளாகும் அச்சம் நிலவுகிறது.






      Dinamalar
      Follow us