/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியரை வாளால் வெட்டி 3 பவுன், ரூ.5000 வழிப்பறி
/
ஆசிரியரை வாளால் வெட்டி 3 பவுன், ரூ.5000 வழிப்பறி
ADDED : ஆக 13, 2025 01:35 AM
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் அய்யனார்குளத்தில் ஆசிரியரை வாளால் வெட்டிய 4 பேர் கும்பல் 3 பவுன் செயின், மோதிரம், ரூ.5000ஐ வழிப்பறி செய்து தப்பியது.
சிவகங்கை அருகே அழகுமெய்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் 43. இவர் கூட்டுறவுபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு முத்துாருக்கு டூவீலரில் அய்யனார்குளம் வழியாக சென்றார்.
வழியில் வாளால் வெட்டி ஆசிரியரை வழிமறித்த 4 பேர் கும்பல் அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின், மோதிரம், ரூ.5 ஆயிரத்தை வழிப்பறிசெய்து தப்பியது. வாளால் தாக்கியதில் காயமுற்ற ஆசிரியர் காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.