நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம்: கல்லல் ஒன்றியம் என்.வைரவன்பட்டியில் சிதம்பர விநாயகர்- ைரவ மூர்த்தி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
வருடாபிேஷகத்தை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாசசாலை பூஜை துவங்கியது. யாகசாலைகளில் புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு பூஜைகள் நடந்தன.
சண்முகராஜா சிவாச்சாரியார் குழுவினர் யாகசாலை பூஜை செய்தனர். பூர்ணகுதி தீபாராதனை முடிந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் 16 வகையான திரவியங்களால்மூலவர்கள் சிதம்பர விநாயகர், வைரவ மூர்த்தி சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடந்து, அலங்கார, தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர்.
கீழச்சிவல்பட்டி, சிறுகூடல்பட்டி, வைரவன்பட்டி, குமாரபேட்டை, அரிபுரம் உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமத்தினர் பங்கேற்றனர்.

