ADDED : மார் 02, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார், ; எஸ்.புதுார் அருகே வாராப்பூர் கிராமத்தில் உள்ள தங்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
பிப். 29ம் தேதி காலை 7:35 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. இரண்டு கால பூஜையாக யாக பூஜை நடத்தப்பட்டது.
நேற்று காலை 8:45 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு கோயில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

