ADDED : ஆக 14, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஆக.15-
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
எஸ்.ஐ., மணிவண்ணன் தலைமையிலான போலீசார் மோப்ப நாய் உதவியுடன் நகர் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களில் சோதனையிட்டனர். பயணிகள் கொண்டு சென்ற பைகள் மற்றும் உடைமைகளை பரிசோதித்தனர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.
