/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயன் தராத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி 13 ஆண்டு கால அவலம் தொடர்கிறது
/
பயன் தராத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி 13 ஆண்டு கால அவலம் தொடர்கிறது
பயன் தராத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி 13 ஆண்டு கால அவலம் தொடர்கிறது
பயன் தராத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி 13 ஆண்டு கால அவலம் தொடர்கிறது
ADDED : ஜன 21, 2025 05:48 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் தொடர்ந்து டாக்டர் பற்றாக்குறை, செவிலியர் பயிற்சி பள்ளி, மறவமங்கலம் தனி போலீஸ் ஸ்டேஷன், இரவு நேர பஸ் வசதி, நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதி என சிவகங்கை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
பயன் இல்லாத மருத்துவமனை
சிவகங்கையில் 2012ல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை துவங்கப்பட்டது. மருத்துவக் கல்லுாரி துவங்கப்பட்ட காலத்தில் இருந்தே தொடர்ந்து டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 230 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் 160 பேர் தான் பணி புரிகின்றனர். இதில் ஸ்பெசலிஸ்ட் டாக்டர்களான இதவியல், நரம்பியல், சிறுநீரகவியல் துறை டாக்டர்கள் பணியிடம் எப்போதும் காலியாகவே உள்ளது. அதேபோல் அடிக்கடி பழுதாகும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க வார கணக்கில் காத்திருக்கும் அவலமும் நீடிக்கிறது.
ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்கு கூட இதவியல் துறை டாக்டர் இல்லாததால் எக்கோ பரிசோதனை செய்வதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் சூழல் உள்ளதால் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இருந்தும் பயனில்லாத சூழல் உள்ளது. மருத்துவக் கல்லுாரியில் செவிலியர் உதவியாளர் பயிற்சி, ஆய்வக நுட்பனர் பயிற்சி, நுண்கதிர் தொழில் நுட்ப பணியாளர் வகுப்பு, செவிலியர் பயிற்சி கல்லுாரி, மருந்தாளுநர் பட்டயப் படிப்பு துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மறவமங்கலத்தில்போலீஸ் ஸ்டேஷன்
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 43 ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப்பகுதியில் சில வருடங்களாக கோயில்கள் வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. காளையார்கோவில் போலீசார் தான் இங்கு உள்ள கிராமங்களுக்கும் இரவு ரோந்து பணிக்கு செல்ல வேண்டும். ஒன்றியத்தில் எல்லை பகுதி பெரியது என்பதால் இரவு ரோந்து செல்வதில் சிரமம் உள்ளது. எனவே மறவமங்கலத்தில் தனியாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை.
நகரில் தீர்க்க முடியாத பிரச்னை
சிவகங்கை நகராட்சியில் கழிவு நீர் கால்வாய் முற்றிலும் சேதமடைந்து மழைநீர் வடிகால் செல்ல வழி இல்லாமல் மழை காலங்களில் ரோட்டில் ஓடுகிறது. நகராட்சியில் 2007ல் பாதாளச் சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. குழாய் பதித்தல் சுத்திகரிப்பு நிலையம், வீடுகளுக்கு இணைப்பு என 3 கட்டங்களாகப் பணிகள் நடந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவு தண்ணீர் தெருக்களில் செல்கிறது. சாக்கடை குழிகளின் மூடி முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
குப்பை கொட்ட இடமில்லை
அதேபோல் குப்பை பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. நகராட்சியில் நாள் ஒன்றுக்கு 13 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஒரே இடத்தில் வைத்து தரம் பிரித்து அப்புறப்படுத்த போதிய இட வசதி இல்லை. ஏற்கனவே குப்பையை தரம்பிரித்து வந்த சுந்தரநடப்பு பகுதியில் கிராம மக்களால் தொடரப்பட்ட வழக்கினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சிக்கு மாற்று இடத்தை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவு நேர பஸ்
தலை நகரான சிவகங்கையில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்ல இரவு 8:00 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லை. எனவே நகரில் இருந்து காரைக்குடி, மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேர பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தலைநகர் சிவகங்கையில் நீண்ட நாட்களாக இழுபறியாக நடந்து வரும் பஸ் ஸ்டாண்ட் கட்டட கட்டுமானப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.