/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எம்.எல்.ஏ., நிதியில் சி.சி.டி.வி.,கேமரா பணம் தராததால் கழற்றி சென்ற நிறுவனம்
/
எம்.எல்.ஏ., நிதியில் சி.சி.டி.வி.,கேமரா பணம் தராததால் கழற்றி சென்ற நிறுவனம்
எம்.எல்.ஏ., நிதியில் சி.சி.டி.வி.,கேமரா பணம் தராததால் கழற்றி சென்ற நிறுவனம்
எம்.எல்.ஏ., நிதியில் சி.சி.டி.வி.,கேமரா பணம் தராததால் கழற்றி சென்ற நிறுவனம்
ADDED : அக் 03, 2024 02:30 AM
திருப்புவனம்:மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் தி.மு.க., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணம் வழங்கப்படாததால் நிறுவனத்தினர் கழற்றி சென்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் ராமநாதபுரம் வரை இருவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடக்கிறது. மானாமதுரை தி.மு.க., எம்.எல்.ஏ., தமிழரசியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2022 மார்ச்சில் 5 லட்சம் ரூபாய் செலவில் 50 சி.சி.டி.வி., கேமராக்கள், சிவகங்கை மாவட்ட எல்லையான கீழடியில் தொடங்கி மானாமதுரை புறநகர் வரை பொருத்தப்பட்டன.
நான்கு வழிச்சாலையில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிய சி.சி.டி.வி., கேமரா பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பதிவுகளை எடுக்கவும், அதனை அலைபேசியில் பதிவு செய்யவும் இரு ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஊழியர்களை பணியில் அமர்த்தி போலீசாருக்கு பதிவு செய்து கொடுத்தனர். இரண்டு ஆண்டுகளாக நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. பலமுறை எம்.எல்.ஏ., அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என அலைக்கழிக்கப்பட்டும் பணம் கிடைக்காததால் விரக்தியடைந்த தனியார் நிறுவனம் 50 கேமராக்களையும் கழற்றி சென்று விட்டது. இதனால் குற்றச்சம்பவங்களில் ஆதாரம் கிடைக்காமல் போலீசார் தவிக்கின்றனர்.
எம்.எல்.ஏ., தமிழரசி கூறியதாவது: தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சி.சி.டி.வி., கேமரா பொருத்த முடியாது என கலெக்டர் அலுவலகத்தில் தெரிவித்து விட்டனர். வேறு வழியிலும் பணம் வழங்க முடியவில்லை. எனினும் முயற்சிக்கிறேன் என்றார்.

