sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பயிரை சேதப்படுத்தும் பன்றிகளால்திருப்புவனத்தில் விவசாயம் பாதிப்பு மார்ச் 13ல் போராட முடிவு

/

பயிரை சேதப்படுத்தும் பன்றிகளால்திருப்புவனத்தில் விவசாயம் பாதிப்பு மார்ச் 13ல் போராட முடிவு

பயிரை சேதப்படுத்தும் பன்றிகளால்திருப்புவனத்தில் விவசாயம் பாதிப்பு மார்ச் 13ல் போராட முடிவு

பயிரை சேதப்படுத்தும் பன்றிகளால்திருப்புவனத்தில் விவசாயம் பாதிப்பு மார்ச் 13ல் போராட முடிவு


ADDED : மார் 11, 2024 05:50 AM

Google News

ADDED : மார் 11, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயத்தை அழிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் போராட முடிவு செய்துள்ளனர்.

வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனம் பகுதியில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவைகள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. திருப்புவனம் பகுதி வாழை இலைகள், தேங்காய்கள் உள்ளிட்டவற்றிற்கு மதுரை மார்கெட்டில் தனி மவுசு உண்டு, வியாபாரிகள் திருப்புவனம் பகுதி வாழை இலைகளை விரும்பி வாங்குவார்கள், மற்ற பகுதி வாழை இலைகள் மூன்று நாட்களில் வாடி பயன்படுத்த முடியாத அளவிற்கு காய்ந்து போய்விடும், திருப்புவனம் பகுதி வாழை இலைகள் பத்து நாட்கள் வரை வாடாது என்பதால் வியாபாரிகள் விரும்பி வாங்குவார்கள், அதுபோல தேங்காய், வெற்றிலைக்கும் தனி மவுசு உண்டு.

கடந்த ஐந்து வருடங்களாக திருப்புவனம் பகுதியியில் ஒவ்வொரு கிராம கண்மாய்களிலும் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டம் கூட்டமாக குடியேறி விவசாயத்தை அழித்து வருகின்றன. திருப்புவனம் பகுதியில் நாற்றங்கால் அமைத்துதான் நெல் பயிரிடுவது வழக்கம். இரவில் வளர்ந்த நாற்றுகளை வேருடன் பிடுங்கி போடுவது, நெல் தூவிய நாற்றங்காலை சேதப்படுத்துவது, வாழை கன்று, தென்னங்கன்றுகளை சேதப்படுத்துவது என பன்றிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருப்புவனம் வட்டாரத்தில் 3,000 எக்டேரில் நெல் பயிரிட்டு வந்த நிலையில் தற்போது ஆயிரத்து 500 எக்டேரில் மட்டுமே அதிலும் நெல் விளைச்சலுக்கு வரும் வரை 24 மணி நேரமும் காவலுக்கு கூலி ஆட்களைநியமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

புதிதாக தென்னை மரங்களை நடவு செய்யவே முடியவில்லை. வாழை விவசாயமும் பெருமளவு குறைந்து விட்டது. பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் விவசாயிகள் நாளை மறுநாள் (13ம் தேதி) திருப்புவனம் தாலுகா அலுவலக வாசலில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us