sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இரவில் அலைபேசி வெளிச்சத்தில் கஞ்சா பொட்டலம் தேடிய கும்பல்

/

இரவில் அலைபேசி வெளிச்சத்தில் கஞ்சா பொட்டலம் தேடிய கும்பல்

இரவில் அலைபேசி வெளிச்சத்தில் கஞ்சா பொட்டலம் தேடிய கும்பல்

இரவில் அலைபேசி வெளிச்சத்தில் கஞ்சா பொட்டலம் தேடிய கும்பல்


ADDED : நவ 04, 2024 07:07 AM

Google News

ADDED : நவ 04, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : தேவகோட்டை பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட்டில் சிறு கடைகள் நடத்துவது போலவும், தியாகிகள் பூங்கா அருகே கடைகள் அருகே அமர்ந்து கஞ்சா விற்பனை சுலபமாக நடக்கிறது.

இது போக நகரின் பல இடங்களிலும் விற்பனை ரகசியமாக நடக்கிறது. பஸ் ஸ்டாண்டில் நடக்கும் விற்பனையில் சிறுவயதினர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேவகோட்டை அருகே அனுமந்தக்குடி போர்குடி பகுதியில் சில இளைஞர்கள் நன்றாக போதையில் ரோட்டில் கிடந்துள்ளனர்.

அந்த பக்கம் சென்றவர்களை இளைஞர்கள் தாக்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராமத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து அந்த போதை இளைஞர்களை விரட்டி அடித்துள்ளனர். தப்பியோடிய இளைஞர்கள் இரவு திரும்பி வந்து மொபைல் லைட் வெளிச்சத்தில் எதையோ தேடி உள்ளனர். இதனை கவனித்த கிராமத்தினர் அங்கு வரவே இளைஞர்கள் ஓடி விட்டனர்.

மொபைல் லைட்டில் என்ன தேடினார்கள் என்று கிராமத்தினர் பார்த்த போது 20 க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கிடந்து உள்ளன. போதையில் இருந்த இளைஞர்கள் கஞ்சா அடித்திருந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து கஞ்சா இளைஞர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us