sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

/

 பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

 பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

 பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு


ADDED : டிச 29, 2025 06:45 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.

சிவகங்கை: சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை காலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். உற்ஸவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருள்வார்.

நாளை காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசலில் ஸ்ரீதேவி பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்வார். இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடுநடைபெறும்.

தேவகோட்டை: தேவகோட்டை கோதண்டராமர் கோயிலில் நாளை காலை 4:00 மணிக்கு பூஜைகளுக்கு பின் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

ரங்கநாத பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அதிகாலை 4:30 மணி அளவில் ரங்கநாத பெருமாள் பரமபத வாசலில் எழுந்தருள்கிறார்.

மாலையில் இரண்டு கோயில்களிலும் சுவாமி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருப்புத்துார்: ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயிலில், நாளை காலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும்.

அதனை தொடர்ந்து உற்ஸவராக ஸ்ரீதேவி, பூதேவியருடன் நாராயண பெருமாள் எழுந்தருள் வார். காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.






      Dinamalar
      Follow us