sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 கொள்ளையடித்த பணத்தில் அச்சகம் துவங்கியவர் சிக்கினார்

/

 கொள்ளையடித்த பணத்தில் அச்சகம் துவங்கியவர் சிக்கினார்

 கொள்ளையடித்த பணத்தில் அச்சகம் துவங்கியவர் சிக்கினார்

 கொள்ளையடித்த பணத்தில் அச்சகம் துவங்கியவர் சிக்கினார்


ADDED : டிச 19, 2025 04:46 AM

Google News

ADDED : டிச 19, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் திருடிய வழக்கில் கைதான இருவர், 2018 முதல் பல்வேறு இடங்களில் திருடி, அதன் மூலம் கிடைத்த பணத்தில் அச்சகம் நடத்தியது தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து, 70 சவரன் நகையை போலீசார் மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருப்பதி நகரில் வசிப்பவர் அய்யாவு மெட்ரிக் பள்ளி தாளாளர் செல்லபாண்டியன், 63.

இவர், குடும்பத்துடன் சென்னை சென்ற நிலையில், டிச., 8ல் வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்ற திருடர்கள் நகை, பணம் இல்லாததால் வெறுங்கையுடன் திரும்பினர். போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் ஈடுபட்டதாக, சிவகாசி அருகே நமஸ்காரித்தான்பட்டியைச் சேர்ந்த தங்கேஸ்வரன், 35, திருத்தங்கலை சேர்ந்த செல்வகுமார், 32, ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 70 சவரன் நகையை மீட்டனர்.

தங்கேஸ்வரன், 2011 -- 2016 கேரளாவில் கூலி வேலை செய்தார். அங்கு பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார்.

பின், சிவகாசியில் அச்சகத்தில் வேலை பார்த்தார். அங்கு வேலை பார்த்த செல்வகுமாருடன் சேர்ந்து 2018 முதல் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார்.

திருடப்பட்ட நகையை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் இருவரும், 2022ல் சிவகாசியில், 'டூ கேண்ட்ஸ்' என்ற பெயரில் சொந்தமாக அச்சகம் துவங்கினர்.

இவர்கள், பகலில் அச்சக வேலையிலும், இரவில் கொள்ளையிலும் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us