/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் தக்காளி விலை சற்று குறைந்தது
/
மானாமதுரையில் தக்காளி விலை சற்று குறைந்தது
ADDED : அக் 11, 2024 05:07 AM
மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.70க்கு விற்ற தக்காளி இந்த வாரம் சற்று விலை குறைந்து ரூ.50 க்கு விற்பனை செய்யப்பட்டது.
மானாமதுரையில் வாரந்தோறும் வியாழன்று நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 70க்கும், நாட்டு கத்தரிக்காய் ரூபாய் 80 என விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வாரம் சற்று விலை குறைந்து ஒரு கிலோ ரூ.50க்கும் கத்தரிக்காய் ரூ.60க்கும்,பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் ரூ.200க்கும், பல்லாரி வெங்காயம்,சின்ன வெங்காயம் ரூ. 60க்கும், பச்சை மிளகாய் ரூ. 60க்கும், பீட்ரூட், கேரட், அவரை ரூ. 60க்கும், முள்ளங்கி, சவ்,சவ், சுரைக்காய் ரூ. 80க்கும் தேங்காய் சிறியது ஒன்று ரூ. 25க்கும், பெரியது ரூ.35 என விற்பனையாகி வருகிறது.
வியாபாரிகள் கூறியதாவது: தக்காளி மற்றும் கத்தரிக்காய் ஆகியவற்றின் வரத்து சற்று கூடுதலாக இருந்ததால் விலை சற்று குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரும் வாரங்களில் மேலும் வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளது என்றனர்.

