sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சுட்டெரிக்கும் கோடை வெயில்: வந்துவிட்டது குஜராத் மண்பானை

/

சுட்டெரிக்கும் கோடை வெயில்: வந்துவிட்டது குஜராத் மண்பானை

சுட்டெரிக்கும் கோடை வெயில்: வந்துவிட்டது குஜராத் மண்பானை

சுட்டெரிக்கும் கோடை வெயில்: வந்துவிட்டது குஜராத் மண்பானை


ADDED : ஏப் 07, 2025 07:10 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில், கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மண்பானை விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

கோடை தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களைப் பார்த்துக் கொள்ள பொதுமக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காத, மண்பானையில் வைத்த குடிநீரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில், மண்பானை, கூஜாக்கள் பல்வேறு வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குஜராத், மானாமதுரை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மண்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

வியாபாரி பாண்டி கூறுகையில்: வெயில் காலத்தில் மக்கள் இயற்கையான குளிர்ந்த நீரை பருக மண்பானையை விரும்பி வாங்குகின்றனர். மானாமதுரை மதுரை திருநெல்வேலி மட்டுமின்றி குஜராத்தில் இருந்தும் மண்பானை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

குஜராத் மண்பானை பார்ப்பதற்கு அழகாக காணப்படும். குழாய் பொருத்தப்பட்டுள்ள மண் பானையை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

ரூ.170 முதல் ரூ. 600 வரை பானைகள் விற்பனை செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us