/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நின்ற நாராயண பெருமாள் திருக்கல்யாணம்
/
நின்ற நாராயண பெருமாள் திருக்கல்யாணம்
ADDED : அக் 13, 2025 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர் : திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இங்கு, காலை 7:00 மணிக்கு கோ பூஜை, சங்கல்ப பூஜை, 108 கலசங்கள் பிரதிஷ்டை செய்து யாகபூஜை துவங்கியது. காலை 11:00 மணிக்கு பூர்ணாகுதி, கடாபிேஷகம், தீபாராதனை நடந்தது. இரவு 7:15 மணிக்கு மாங்கல்யதானம், வாரணமாயிரம் வைபவம் நடந்தது. உற்ஸவ பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.