ADDED : மே 11, 2025 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரான்மலை : சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் தீர்த்தவாரி நடந்தது.
இக்கோயிலின் சித்திரைத் திருவிழா மே 1ல் தொடங்கியது. 10 நாள் மண்டபடியாக தினமும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மே 5ல் திருக்கல்யாணம், மே 9 ல் சித்திரை தேரோட்டம் நடந்தது.
10ம் நாளான நேற்று தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.
மண்டகப்படியில் இருந்து சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி குளத்திற்கு முன் எழுந்தருளினர்.
சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.