ADDED : ஜூலை 28, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : பரமக்குடி அரசு கல்லுாரி பேராசிரியர் அண்ணாத்துரையின் கோ.அழகாபுரியில் உள்ள வீட்டில் 6 பவுன் நகை, ரூ.15,000 மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
காரைக்குடி அருகே கோ.அழகாபுரியில் வசிக்கும் பேராசிரியர், அவரது மனைவி தனியார் பள்ளி ஆசிரியை. இருவரும் வேலைக்கு சென்று வீடு திரும்பினர்.
அப்போதுவீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.15,000யை மர்மநபர்கள் திருடி சென்றனர். பள்ளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.