நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: திருப்புவனம் அருகே உள்ள கழுவங்குளத்தில் வயகுருநாத சுவாமி அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.
இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு  சிலர் சுவர் ஏறி குதித்து கோவிலின் முன்பக்க இரும்பு கேட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.5,500, குத்து விளக்கு 10, பொங்கல் பாத்திரம் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர். கழுவங்குளம் சக்கரவர்த்தி 47 திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார்.

