sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தி. வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

/

தி. வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

தி. வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

தி. வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா


ADDED : ஜூலை 19, 2025 12:16 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் அருகே தி.வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலகால பைரவருக்கு வழிபாடு நடந்தது.

இக்கோயிலில் பைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி ஸ்ரீமூலபால கால பைரவர் என்றழைக்கப்படுகிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

நேற்று மாலை மூலவர் மூலபாலகால பைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கின. தொடர்ந்து சிவாச்சாரியார்களால் மகா பைரவயாகம், கோ பூஜை நடந்தது.

சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

பின்னர் யாகசாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் நிறைந்த கலசங்களுக்கு அடுக்கு தீபம், பஞ்சமுக தீபம், கும்ப தீபம், நாக தீபம், ஒற்றை தீபம், கற்பூர தீபம் ஆகிய தீபாராதனை நடந்தன. தொடர்ந்து மூலவருக்கு அபிேஷக, ஆராதனை நடந்தது. பெண்கள் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பைரவரை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us