
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன. வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தன.
பட்டுக்குருக்கள் நகரில் உள்ள ஸ்வர்ண பைரவர் கோவிலில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. அலங்காரத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆதர்ஷன ஸ்வர்ண பைரவர் கோவிலிலும் சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.