/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகர் நல மையத்தில் டாக்டர்கள் இல்லை
/
நகர் நல மையத்தில் டாக்டர்கள் இல்லை
ADDED : ஆக 19, 2025 07:46 AM
சிவகங்கை : சிவகங்கை எல்.ஐ.சி., அலுவலகம் எதிரே உள்ள நகர் நல மையத்தில் மாலை நேரத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
சிவகங்கை மஜித் ரோட்டில் எல்.ஐ.சி.,அலுவலகம் அருகில் உள்ளது நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கக்கூடியது.
இங்கு காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மட்டுமே டாக்டர்கள் பணியில் இருக்கின்றனர். மற்ற நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இங்கு 24 மணி நேரமும் நாய்க்கடி தடுப்பூசி, பாம்பு கடிக்கு விஷ முறிவு ஊசி அளிக்கப்படுகிறது. மாரடைப்பு முதலுதவி, அவசர மருத்துவ பெட் டகம் இங்கு உள்ளது. ஆனால் டாக்டர்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பணியில் உள்ளனர்.
மற்ற நேரங்களில் நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர்கள் இல்லை. இங்கு உள்ள செவிலியர்களே சிகிச்சை அளிக்கின்றனர். அல்லது அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப் படுகிறார்கள்.
மாலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், பணிக்கு சென்றவர்கள் காய்ச்சல் தலைவலி அல்லது ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைக்கு வந்தால் மருத்துவமனையில் டாக்டர்கள் இருப்பதில்லை.24 மணி நேரமும் இயங்க கூடிய மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே டாக்டர்கள் இருப்பதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
மாவட்ட மருத்துவ துறை நிர்வாகம் நகர் புறங்களில் இயங்கக் கூடிய நகர் நல மையங்களில் 24 மணிநேரமும் டாக்டர்கள் பணியில் இருந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.